எந்தெந்த பழங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, April 19, 2025

எந்தெந்த பழங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும்?

 எந்தெந்த பழங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும்?


பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன் வாழலாம்.


அத்திப்பழம்: உடலுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். ரத்தம் விருத்தியாகும். பித்த சூட்டை அகற்றும் வல்லமை உடையது.


அன்னாசிபழம்: ஜீரண சக்தியை உண்டாக்கும். இதய கோளாறுக்கு சிறந்தது. வாந்தி, வயிற்றுக் கடுப்பு, தொண்டைப்புண் ஆகியவைகளுக்கு சிறந்தது.


இலந்தைப்பழம்: வாந்தியை கட்டுப்படுத்தும். பசியை உண்டாக்கும். குடலை சுத்தப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும்.


கொய்யாப்பழம்: மலச்சிக்கலைப் போக்கும். நல்ல பசி உண்டாக்கும். தொடர்ந்த விக்கலை நிறுத்தும்.


சீத்தாப்பழம்: உடலுக்கு வலிமையை கொடுக்கும். இதயத்திற்கு பலம் அளிக்க வல்லது.


நாவல்பழம்: பசியை உண்டாக்கும்.சிறுநீர் பெருக்கும். நீரிழிவு, வாய்வு ஆகியவற்றை போக்கும். உடலை வலிமைப்படுத்தும்.


பப்பாளிப்பழம்: மலச்சிக்கலைப் போக்கும். உடலை வெப்பமடைய செய்யும். குடலில் ஏற்படும் உபாதைகளை போக்கும்.


பேரீச்சம் பழம்: பித்தம், வாந்தி இவைகளுக்கு மருந்தாக அமையும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வலிமையை கொடுக்கும்.


மாதுளம்பழம்: பித்தத்தைப் போக்கும். மலச்சிக்கலை அகற்றும். மூளைக்கும், பல்லுக்கும் உறுதியைக் கொடுக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாக அமையும்.


விளாம்பழம்: பித்தம், சொறி, சிரங்கு, வாய்ப்புண், தொண்டை நோய் போன்றவற்றைப் போக்கும். உடலுக்கு வலிமையை சேர்க்கும்.


சப்போட்டா பழம்: புத்துணர்ச்சியும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.


வெள்ளரிப்பழம்: வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், குடற்புண் முதலிய நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும். தாகத்தை தீர்க்கும். சூடு தணியும். களைப்பு நீங்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.


தர்பூசணிப்பழம்: குளிர்ச்சியை அளிக்கும். தாகத்தை தணிக்கும். புத்துணர்ச்சியை உடம்புக்கு தரும்.


முலாம் பழம்: மலச்சிக்கல், சீதபேதி, கீழ் வாதம், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு, மேக நோய் முதலியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.


ஆரஞ்சுப்பழம்: கண் நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா, குடற்புண், அஜீரணம், பல்நோய், சொறி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். பழங்களை உண்போம். நோயின்றி வாழ்வோம்.

No comments:

Post a Comment