சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ 20,600 முதல் ரூ 2,00,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 11, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ 20,600 முதல் ரூ 2,00,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ரூ 20,600 முதல் ரூ 2,00,000 வரை ஊதியத்தில்  பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி உதவியாளர்கள், பதிவாளரின் தனிச் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் தனிப்பட்ட கிளார்க் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தனிப்பட்ட உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்


நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் -28


பதிவாளரின் தனிச் செயலாளர்- 1


தனிப்பட்ட உதவியாளர்கள்- 14


தனிப்பட்ட கிளார்க்- 4


மொத்தம் -47


வயது வரம்பு


சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.


 அதிகபடியாக வயது வரம்பு 32 ஆக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி எம்பிசி, பிசி பிரிவினருக்கு 37 வயது வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். மேலும், அலுவலக ஆட்டோமேஷன் கணினியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்


நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் பதிவாளரின் தனிச் செயலாளர் பதவிகளுக்கு நிலை -22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

தனிப்பட்ட உதவியாளர்கள் பதவிக்கு நிலை 16 கீழ் ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

தனிப்பட்ட கிளார்க் பதவிக்கு ரூ,20,600 முதல் ரூ.,75,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு பொது எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


சென்னை உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் பதிவாளரின் தனிச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். தனிப்பட்ட உதவியாளர்கள் பதவிக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். தனிப்பட்ட கிளார் பதவிகளுக்கு ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாறுத்திற்னாளிகள் மற்றும் ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.


 அறிவிப்பை பார்க்க


https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20NO.71-%20PERSONAL%20ASSISTANT.pdf


சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.


சென்னை ஐகோர்ட்டில் உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலிப்பணியிடங்கள் உள்ளன.


சென்னை உயர்நீதிமன்றத்தில்  உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலி பணியிடங்களுக்கு அடுத்த மாதம் மே 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு கட்டணம் செலுத்த மே 06 ஆம் தேதி கடைசி நாளாகும்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், ரூம் பாய், தூய்மைப் பணியாளர்கள், வீட்டு உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பொது எழுத்துத் தேர்வு, திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


காலிப்பணியிடங்கள்:


அலுவலக உதவியாளர் - 137


வீட்டு உதவியாளர் - 87


தூய்மைப் பணியாளர் - 73


சுகாதார பணியாளர் - 49


தோட்டப் பணியாளர் - 24


சோப்தார் - 12


காவலர் - 4


சம்பள விவரம்:


ரூ.15,700 - ரூ.58,100 + சிறப்பு அலவன்ஸ் கொடுக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


இதேபோல், நீதிபதிகளின் உதவியாளர்கள் (28), தலைமை பதிவாளரின் தனி செயலாளர் (1), பதிவாளர்களின் உதவியாளர்கள் (14) மற்றும் கிளர்க் (4) ஆகிய காலிப்பணியிடங்களும் உள்ளன.


 மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு


  https://www.mhc.tn.gov.in/recruitment/login


என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதன் விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களை அறிய, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு இணையதளமான


  https://www.mhc.tn.gov.in/recruitment/login



என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 5-5-2025


தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 6-5-2025

No comments:

Post a Comment