1161 காலிப்பணியிடங்களுக்கு ரூ 21,700 முதல் ரூ 69,100 வரை ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு..!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சமையல், தையல், பெயிண்டிங், பார்பர், சலவை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் பெறலாம்.
மொத்தமாக 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன, இதில் ஆண்களுக்கு 945, பெண்களுக்கு 103, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 113 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரங்களைப் பார்க்கும்போது, சமையலாளராக 444, பார்பராக 180, சலவை செய்பவராக 236, தூய்மை பணியாளராக 137, தையல்காரராக 21, பெயிண்டராக 2, தச்சராக 8, எலக்ட்ரீஷியனாக 4, மாலியாக 4, வெல்டராக 1, சார்ஜ் மெக்கானிக்காக 1, மற்றும் எம்பி உதவியாளராக 2 இடங்கள் உள்ளன.
வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (01.08.2025 தேதியின்படி). மேலும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகள் படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியைப் பொருத்தவரை, விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட தொழில்பிரிவில் ITI (Industrial Training Institute) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (03.04.2025 தேதியின்படி).
தேர்வு முறை
கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய கட்டங்களில் நடைபெறும்.
சம்பள விவரம்
குறைந்தபட்சம் ₹21,700 முதல் அதிகபட்சம் ₹69,100 வரை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் CISF அதிகாரப்பூர்வ இணையதளம்
https://cisfrectt.cisf.gov.in/
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் 05.03.2025 அன்று தொடங்கும் மற்றும் 03.04.2025 அன்று முடிவடையும்.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மத்திய அரசு வேலை விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக் கொண்டு, நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment