இந்து கோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது? அதன் ரகசியங்கள் என்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 20, 2024

இந்து கோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது? அதன் ரகசியங்கள் என்ன?

 இந்து கோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது? அதன் ரகசியங்கள் என்ன?


அதைக் கேட்டதும் தருமரின் ஆணவம் அழிந்தது. தான் இதுவரை செய்து வந்த தானமும்- தர்மமும் இவன் முன்பு ஒன்றும் இல்லை என்று தருமர் நினைத்து வருந்தினார். அப்போது கிருஷ்ணர் தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி விஸ்வரூபமாக மயூரத்வஜனுக்கு தரிசனம் அளித்தார். மேலும் "கடவுளை வணங்கும் இடங்களில் நீயும், உன் மனைவி, மகனும் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) ஆக இருப்பீர்கள். ஆலயத்தில் உள்ள தெய்வத்தை வணங்குவதற்கு முன்பாக அனைவரும் உங்களை வணங்குவார்கள்" என்ற வரத்தை அருளினார்.


கொடி மரமானது, ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்ற மரத்தில் செய்யப்படுகிறது. அது தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டு, ஆகம விதிப்படி சில சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. கொடிமரத்தின் மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. அதன் பெயர் 'மேகலா' ஆகும். அந்த மூன்றும் பூமி, அண்டம், சொர்க்கம் ஆகியவற்றை குறிப்பதாகும். அதில் பாலி என்ற சிறிய மணி இருக்கும். கொடி மரத்தின் உச்சியில் மயூரத்வஜனை நினைவுகூரும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் இருக்கும். கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடிக்கு 'த்வஜபடம்' என்று பெயர். அந்த கொடியில் நந்தி, கருடன் அல்லது திரிசூலம் போன்றவை பொறிக்கப்பட்டு இருக்கும். கொடிமரத்தை சுற்றாமல், கோவில் பிரதட்சணம் நிறைவு பெறாது.

No comments:

Post a Comment