மருதாணி நன்கு சிவப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 5, 2024

மருதாணி நன்கு சிவப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

 மருதாணி நன்கு சிவப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?



மருதாணி சிவப்பாக பிடிப்பதற்கான டிப்ஸ்கள்


சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு


சிவப்பான மருதாணி வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவ வேண்டும்.


 இதனால் விரைவில் காய்ந்துவிடாமல் நீண்ட நேரத்திற்கு உங்களது கைகளில் ஒட்டிக்கொள்வதோடு, நல்ல சிவப்பு நிறத்தையும் நமக்கு வழங்குகிறது.


கிராம்பு பயன்படுத்துதல்

மருதாணி கைகளில் இடுவதற்கு முன்னதாக கிராம்பை அந்த பேஸ்டுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சுமார் 3-4 கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்கும் போது நல்ல சிவப்பு நிறம் உங்களுக்கு கிடைக்கும்.


கடுகு எண்ணெய் பயன்படுத்துதல்


கடுகு எண்ணெய்யைக் கொண்டு கைகளில் மருதாணியை நீக்கலாம். இல்லையென்றால் கடுகு எண்ணெய்க்கு பதில் யூகலிப்டஸ் எண்ணெய்யையும் நீங்கள் உபயோகிக்கலாம்.


இதுபோன்று பல நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நிச்சயம் உங்களது கைகளில் மருதாணி செக்கச் சிவப்பாக நிச்சயம் பிடிக்கும். மருதாணி இடுவது அழகுக்காக மட்டுமில்லாமல் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.


மருதாணி இலைகள் தசை இறுக்கத்தைத் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது.


இரத்த போக்கினைத் தடுத்து மாதவிடாய் பிரச்சனையை சரி செய்வது, கால்களில் பித்த வெடிப்பைத் தடுப்பது, உடல் உஷ்ணத்தை குறைப்பது போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது மருதாணி இலைகள்..

No comments:

Post a Comment