10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, October 7, 2024

10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


ராமநாதபுரத்தில் இளைஞரு நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் உடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.


10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மாவட்ட வாரியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் படி நிரப்பப்படுகிறது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் இளைஞரு நீதிக்குழுமத்தில் உள்ள பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்


உதவியாளருடன் உடன் இணைந்த கணினி இயக்குபவர்


இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் :



இப்பணியிடத்திற்கு ஆண் அல்லது பெண் விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பு 42 வரை நிரணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை சான்றிதழ்களும், கணினி இயக்க பயிற்சியுடன் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை :


இப்பணியிடத்திற்கு விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,916 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால் தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:


ராமநாதபுரத்தில் இளைஞரு நீதிக்குழுமத்தில் உள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இப்பணிக்கான விண்ணப்பப் படிவத்தை


 https://ramanathapuram.nic.in/ 


என்ற ராமநாதபுர மாவட்ட இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.


 முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய கல்வித்தகுதி, அடையாள அட்டை, அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தபால் வழியாக அனுப்பி வைக்கவும்.


தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :



மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்


 மாவட்ட நீதிமன்றம் தென்புறம்,


 ராமநாதபுரம் - 623 503.


விண்ணப்பிக்க கடைசி நாள் :


15.10.2024 மாலை 5.45 மணி வரை


இப்பணி குறித்த மேலும் விவரங்களுக்கு 043 67231098 அல்லது 04567 29956 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனே மேல் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment