எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 23, 2024

எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது?

 எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது?


இயற்கையாகவே அழகும், மணமும் நிறைந்தவை மலர்கள். மனித உடலில் ஏற்படும் குறைகளுக்கு சில பூக்கள் மருத்துவ குணங்கள் உடையது.


செம்பருத்தி: தலை முடிக்கு சிறந்த மருந்தாகும். முடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை உலர்த்தி அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்யும். ரத்த அழுத்தம், இதய படபடப்பு, வயிற்றுப் பிடிப்பு போன்றவைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.


லாவெண்டர்: இதன் நறுமணம் உடலை ரிலாக்ஸாகவும், அஜீரணக் கோளாறுகளையும் சீர் செய்யும்.


செண்பகப்பூ: பருக்களுக்கு கிருமி நாசினியாக செயல்படுகிறது. கஷாயம் வைத்தோ, பாலில் கலந்தோ பருகினால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ேகாளாறுகளை குணப்படுத்தும்.


மல்லிகை: மன அழுத்தத்தை, நரம்பு சோர்வடைவதை தடுக்கும். மல்லிகைப்பூவில் உள்ள சாலிசிலிக் அமிலம், லினாநூல் நரம்புகளை ரிலாக்ஸ் ஆக வைக்கிறது. இது தாய்ப்பால் கெட்டியானால் மார்பகத்தில் வைத்துக் கட்டினால் சரியாகும்.


தாமரை: இதில் இருக்கும் லிநோலெய்க் அமிலத்தில் இரும்புச் சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்தும் நிறைந்துள்ளது. ஆயுர்வேத மருந்தாகவும், அஜீரணக் ேகாளாறு, இரைப்பைப் புண் போன்றவைகளுக்கு கஷாயம் வைத்து குடித்தால் விரைவில் குணமாகும். ரோஜா: பித்தம், மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவைகளுக்கு ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் அளவு சுண்டியதும் காலை, மாலை 7 நாட்கள் குடித்தால் பித்தம் முதல் அனைத்தும் நீங்கும்.


பன்னீர் பூ: இதனை பீங்கான் கப்பில் மட்டுமே ஊறவைக்க வேண்டும். தூக்கமின்மை, நரம்பு சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும். தினமும் இரவில் 7 காய்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.


சாமந்திப்பூ: இதனை கசாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடு குறையும். இதழ்களை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.


பவளமல்லி: இது நீரிழிவு நோய்க்கும், சிறுநீரகத்தை காக்கக்கூடிய மருத்துவத்தன்மை கொண்டது. வீட்டில் பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்றும் உடல் ஆரோக்கியத்தை தரும்.

No comments:

Post a Comment