மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கல்வித் துறை செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 28, 2024

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கல்வித் துறை செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கல்வித் துறை செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு


பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு:



அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பருக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்க வேண்டும்.



மழைக்காலம் துவங்க உள்ளதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படும் முன், பள்ளிகளில் ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும். அதற்கு பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, பொதுப்பணித் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும், விஷப் பூச்சிகளிடம் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், தற்போதைய காலாண்டு விடுமுறையில், பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.


இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் உள்ளிட்டவற்றை தவிர்க்க, நீண்ட காலமாக பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.



குழந்தைகளை 'போக்சோ' குற்றத்திற்கு ஆளாக்காத வகையில், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.



இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.



ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆர்த்தி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உமா பங்கேற்றனர்.


ரூ.798 கோடியில் கட்டடம்


மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்ட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக, நபார்டு வங்கியிடம் வாங்கிய 284 கோடி ரூபாயை பயன்படுத்தி, 546 ஆரம்பப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது.இதை தொடர்ந்து, 497 உயர்நிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டும் பணிகள், 798 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ளன. இதற்கு கடனுதவி வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வகுப்பறை கட்டுவதற்கு 22 லட்சம் ரூபாயும், கழிப்பறைக்கு 10 லட்சம் ரூபாயும் செலவிடப்படவுள்ளன.

No comments:

Post a Comment