10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 39,481 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு:பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 23, 2024

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 39,481 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு:பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) அறிவிப்பு

 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு  39,481 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு:பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) அறிவிப்பு


பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) ஆண்டுதோறும் பல்வேறு விதமான காலிபணியிடங்களை கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.


பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) ஆண்டுதோறும் பல்வேறு விதமான காலிபணியிடங்களை கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, தற்போது 10ம்- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான கான்ஸ்டபிள் (பொதுப் பணி) க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நிறுவனத்தின் பெயர்: பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC)


மொத்த பணியிடங்கள்: 39,481


பணி விவரம்: மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) கான்ஸ்டபிள் (பொதுப் பணி) மற்றும் SSF, ரைபிள்மேன் (பொதுப் பணி) அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் சிப்பாய் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத் தேர்வு


கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18-23 வயதுடையவராக இருக்க வேண்டும் (அதாவது, 02.01.2002 க்கு முன் பிறக்காதவர்கள் மற்றும் 01.01.2007க்கு பின் பிறக்காதவர்கள்)


தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), விரிவான மருத்துவப் பரிசோதனை (DME), மறுபரிசீலனை மருத்துவப் பரிசோதனை (RME) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (DV) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


தேர்வு மொழி: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி


தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி


விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2024


விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://ssc.gov.in/

No comments:

Post a Comment