காலை எழுந்தவுடன் என்னென்ன பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 31, 2024

காலை எழுந்தவுடன் என்னென்ன பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

 காலை எழுந்தவுடன் என்னென்ன பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?


காலையில் நாம் முதன் முதலில் பருகுவது உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொருத்தும்தான் இருக்க வேண்டும்.


*காலை எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.


*தண்ணீருக்குப் பதிலாக முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை நீருடன் குடிக்கலாம்.


*அருகம்புல் சாறு அல்சர் நோயாளிக்கு ஏற்ற பானம். அருகம்புல்லை நாமே வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.


*வெள்ளைப்பூசணி சாறு குடித்தால் தொப்பை, ஊளைச் சதை குறையும். சிறிது மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொண்டால் முழுபலன் பெறலாம்.


*இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக் குறையும். நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.


*நெல்லிச்சாறு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை அதிகரிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.


* இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான அனைத்து மினரல்களும் இதில் உள்ளது.


* பழைய சாதத்தில் சிறிது சீரகத்தை இட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். காலையில் இந்த நீராகாரத்தை அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கின்றன.


No comments:

Post a Comment