அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல் உண்மையா?தமிழக அரசு விளக்கம் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 11, 2024

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல் உண்மையா?தமிழக அரசு விளக்கம்

 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல்  உண்மையா?தமிழக அரசு விளக்கம்


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.


தமிழக அரசு விளக்கம்:


அரசு ஊழியர் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாகப் பரவும் தகவல் என, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,


'வதந்தி: அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது' என்ற தகவல் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆலோசனையும் இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment