நவகிரகங்களை எப்படி வழிபடுவது? எத்தனை முறை வலம் வர வேண்டும்? எந்த கிரகத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 27, 2024

நவகிரகங்களை எப்படி வழிபடுவது? எத்தனை முறை வலம் வர வேண்டும்? எந்த கிரகத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

 நவகிரகங்களை எப்படி வழிபடுவது? எத்தனை முறை வலம் வர வேண்டும்? எந்த கிரகத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


கோயிலுக்கு வழிபடச் செல்லும் பக்தர்களுக்கு இருக்கும் முக்கிய சந்தேகங்களில் நவகிரக வழிபாடு சந்தேகமும் அடங்கும். எத்தனை முறை வலம் வர வேண்டும், எப்படி வணங்க வேண்டும், எந்தக் கிழமைகளில் வணங்க வேண்டும் என்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு வழிபாடு நடத்துவது நல்ல பலன்களை தரக்கூடும்.


குறிப்பாக ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போது மக்களுக்கு நவகிரக வழிபாடு செய்ய அதிக கோயிலுக்கு செல்கின்றனர். இருப்பினும் சரியான வழிபாட்டு முறையை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல வழிபாடு செய்து கிரக தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய வழிபடுவோம்.


கிரகங்கள் சுற்றும் முறை:


நவகிரகங்களில் உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் வலமாக சுற்றுவதால், அந்த கிரகங்களுக்காக 7 சுற்று சுற்ற வேண்டும் என்றும், பின்னர் ராகு, கேது கிரகங்கள் இடமாக சுற்றுவதால், அதற்காக இடது புறமாகச் சுற்று சுற்ற வேண்டும் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. அப்படித்தான் செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் பலரின் மனதில் எழுவதுண்டு.


ஆனால் இது தவறான செயல். நவகிரகங்களை வழிபட்டு, நாம் 9 முறை வலமாக சுற்றி வருவது தான் சரியானது.


அதே போல் கோயிலுக்கு சென்றால் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, பின்னர் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாக நவகிரகங்களை தரிசிப்பது தான் சரியானது.


அதே போல் எந்த தெய்வங்களையும் தொட்டு வணங்குதல் கூடாது. குறிப்பாக நவகிரகங்களை தொட்டு வணங்குதல் கூடாது என்ற ஐதீகம் உள்ளது.


சனி, ராகு, கேது மட்டும் பாதிப்பைத் தரக்கூடியவர்களா?


பெரும்பாலானோர் சனி, ராகு, கேது கிரகங்கள் தான் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் என நினைக்கின்றனர். ஆனால் சுப கிரகங்களாகக் கருதப்படும் புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் கூட, அவர்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து நன்மையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்துவார்கள். இதனால் நவகிரகத்தில் உள்ள அனைத்து கிரகங்களையும் வழிபடுவது அவசியம்.


கிரக வழிபாடும் அதன் பலன்களும்:


சூரிய பகவானை வழிபாட்டால் உங்கள் வாழ்வின் ஆரோக்கியமும், மங்களமும் கிடைக்கும்.


சந்திர பகவானை வணங்கினால் அவரைப் போல் பிரகாசமான புகழ் கிடைக்கும்.


செவ்வாயை பகவான் அதாவது அங்காரனை வணங்கினால் உங்களின் தைரியம் அதிகரிக்கும்.


புதன் பகவானை (கல்வி அதிபதி) வழிபட்டால் நல்ல புத்தியும், சிறந்த அறிவாற்றலும் கிடைக்கும்.


குரு பகவான் (வியாழன்) வணங்கி வந்தால் உங்களுக்கு குறையாத செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.


சுக்கிர பகவான் (வெள்ளி) வணங்கும் போது நல்ல மனைவி அமைவதோடு, வீடு, மனை வாங்கும் சிறப்பான யோகம் உண்டாகும்.


சனி பகவானை வணங்கி வரும் போது நம் ஆயுள் பெரும்.


ராகு பகவானை வணங்கி வந்தால் உங்களின் பயணத்தால் நன்மைகள் கிடைக்கும்.


கேது பகவானை வணங்கி வரும் போது உங்களின் ஞானம் பெருகுவதோடு, ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அதன் மூலம் மோட்சம் கிடைக்கும்.


அதோடு கிழமைக்கு ஏற்றவாறு அதற்குரிய கிரகத்தை வழிபட்டு வந்தால் அதற்கான கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


நவகிரக தோஷ நிவாரணி:


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை பாடுவதன் மூலம் நவகிரக தோஷத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.


கோளறு பதிகத்தின் முதல் பதிகம்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

ளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே


கோளறு பதிகத்தின் முழு பதிகத்தையும் பாடி நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.

No comments:

Post a Comment