மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, July 2, 2024

மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்

 மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்


* தேங்காய் பர்பி கிளறும்போது ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை போட்டால் விரைவில் பர்பி பூத்து வரும். பர்பியும் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.


* அடை மாவுடன் கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.


* வடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கலந்தால் மாவு இறுகி வடையும் நெய் வாசனையாக ஒன்றாக இருக்கும்.


* முள்ளங்கி, கேரட் இரண்டையும் துருவி உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம், கடுகு தாளித்து சாப்பிட சுவையாக இருக்கும்.


* ஜாடியில் ஊறுகாயைப் போடுமுன் சூடாக்கிய எண்ணெயில் துணியை நனைத்து ஜாடியின் உட்புறத்தை துடைத்துப் பின்னர் ஊறுகாயை போட எளிதில் கெடாது.


* முட்டைக்கோஸை தேங்காய் எண்ணெயில் தாளித்தால் முட்டைக்கோஸிலிருந்து வரும் வாசனை தெரியாது.


* மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும் போது தேங்காயை கொஞ்சம் குறைத்துக் கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்துக் கலக்கினால் குழம்பு ஒருவித வாசனையுடன் இருக்கும்.


* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும், எளிதில் ஜீரணமும் ஆகும்.


*ஒரு வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.


* ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டு தோலை எறியாமல் குடிக்கும் தண்ணீருடன் சேர்த்தால் தண்ணீர் சுவையாக இருக்கும்.


* கீரையை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் சுவையாகவும் நிறம் மாறாமல் இருக்கும்.


* பூண்டு அதிகமாக உரிக்க வேண்டி இருந்தால் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து உரித்தால் உரிக்க ஈஸியாக வரும்.


*பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.


*தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.


*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.


*இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்!


* காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.


* சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.


* கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.


* சின்ன நெல்லிக்காயை கேரட் துருவலில் சின்னதாகத் துருவிக் கொண்டு, மாங்காய் சாதத்திற்கு தாளிப்பது போல தாளித்து, நெல்லிக்காய் சாதம் தயாரிக்கலாம். தொட்டுக் கொள்ள தேங்காய் துவையல் நன்றாக இருக்கும்.


* இரவில் சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி வைக்கும் போது சிறிதளவு உப்பையும் போட்டு வைத்தால் காலையில் சாதம் கூழாக கெட்டுப் போகாமல் விறைப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment