சமையல் குறிப்புகள்: மறக்க கூடாத சில விதிமுறைகள்:செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 5, 2024

சமையல் குறிப்புகள்: மறக்க கூடாத சில விதிமுறைகள்:செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

 சமையல் குறிப்புகள்: மறக்க கூடாத சில விதிமுறைகள்:செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை


ரசம் அதிகமாகக் கொதிக்கக் கூடாது.


காபிக்கு பால் நன்றாகக் காயக் கூடாது.


மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.


கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.


காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.


சூடாக இருக்கும்போது, எலுமிச்சம்பழம் பிழியக் கூடாது.


தக்காளியையும், வெங்காயத்தை யும் ஒன்றாக வதக்கக் கூடாது.


 ஃபிரிட்ஜில் வாழைப் பழமும் உருளைக் கிழங்கும் வைக்கக் கூடாது.


 பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாகக் காயக் கூடாது.


தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாகக் கொதிக்கக் கூடாது.


 குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.


குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.


 மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.


புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாகக் கரைக்க வேண்டும்.


 ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.


 போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.


 குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவைச் சேர்க்க வேண்டும்.


பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.


 குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.


வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.


 கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.


 வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

No comments:

Post a Comment