இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க சில டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, March 18, 2024

இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க சில டிப்ஸ்..!

 இயற்கையான முறையில்  முகத்தை அழகாக்க சில டிப்ஸ்..!


அதிக பணம் கொடுத்து எதற்காக செயற்கை அழகை பெற வேண்டும்?இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்கும் சில எளிய பொருட்களை வைத்து எப்படி முகத்தை அழகாக்குவது என்று பார்க்கலாம்.


எளிய வழிமுறைகள்


* வீட்டில் தேநீருக்காக காய்ச்சிய பாலிலிருந்து வரும் ஆடையை (பால் ஆடை) தனியே எடுத்து ஆர வைத்து, முகத்தில் போட்டு வர முகத்தின் கருமை நிறம் நீங்கி முகம் அழகாகும்.


* கற்றாழை சாறுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.


* தக்காளியை இரண்டாக வெட்டி ஒரு பாகத்தில் சர்க்கரையை சேர்த்து முகத்தில் மெதுவாக தேய்த்து வர முகத்தின் கருமை நிறம் நீங்கும்.


* பச்சைப் பயறு (பாசிப்பயறு) மாவை குளிக்கும் முன் உடம்பில் பூசி குளித்தால் வியர்வையால் வரும் துர்நாற்றங்கள் நீங்குவதோடு, சருமம் மிருதுவாகும்.


* எண்ணெய் பிசுக்கில்லாத மிருதுவான சருமம் பெற கடலைமாவு, பச்சைபயறு (பாசிப்பயறு) சேர்த்து பூச வேண்டும்.


* இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் இருப்பதன் மூலம், கண்களில் கருவளையம் ஏற்படுவதை தடுக்க முடியும்.


* அடர் கருமை உள்ள இடங்களில் பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து வர கருமை நிறம் நீங்கும்.


* காரட், பீட்ரூட், பப்பாளி பழ சாறு குடித்து வர முகத்தின் அழகு கூடும்.


* முடிந்தளவு, பழங்களை அரைத்து முகத்தில் பூசுவதற்கு பதிலாக, உண்டு வந்தால் அழகு, ஆரோக்கியம் இரண்டுமே மேம்படும்.


விளக்கெண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கண் அடிபாகத்தில் பூசி 2 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் கண் கருவளையம் நீங்கும்.

No comments:

Post a Comment