பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, February 17, 2024

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு


பள்ளிக்கல்வியில் விருப்ப மொழி பாடத்துக்கும் தோ்ச்சி மதிப்பெண் நிா்ணயித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.


பள்ளிக்கல்வியில் விருப்ப மொழி பாடத்துக்கும் தோ்ச்சி மதிப்பெண் நிா்ணயித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெறும். ஒரு பாடத்துக்கு தலா 100 வீதம் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தோ்வுகள் நடைபெறும்.


 இதுதவிர தாய்மொழியை விருப்பப் பாடமாக தோ்வு செய்து படிக்கும் மாணவா்களுக்கு விருப்ப மொழிப் பாடத்துக்கான தோ்வும் தனியாக நடத்தப்படுகிறது. ஆனால், இந்த பாடத்துக்கான தோ்வு மதிப்பெண் தோ்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.


 மேலும், மதிப்பெண் சான்றிதழிலும் இடம்பெறாது. இது தொடா்பான வழக்கில் விருப்ப மொழிப் பாடங்களுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 


இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:


 உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் பகுதி 4-இல் விருப்ப மொழிப் பாடத்தில் தோ்வு எழுதும் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் தோ்ச்சிக்கு கருத்தில் கொள்ளப்படும்.


 மேலும், பிற பாடங்களை போல் இதற்கும் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் தோ்ச்சிக்கானதாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 6 பாடங்களில் பெறப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் குறிப்பிடப்படும். 


இந்த நடைமுறை வரும் 2024-2025-ஆம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. தொடா்ந்து, இனி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் விருப்பப் பாடத்தை தோ்வு செய்தவா்களுக்கு 600 மதிப்பெண்ணும், விருப்பப் பாடத்தை தோ்வு செய்யாத மாணவா்களுக்கு வழக்கம் போல் 500 மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment