குளிர்காலத்தில் ஏசியைப் பராமரிப்பது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 5, 2024

குளிர்காலத்தில் ஏசியைப் பராமரிப்பது எப்படி?

 குளிர்காலத்தில் ஏசியைப் பராமரிப்பது எப்படி?


கோடைகாலத்தில் சூரியனின் வெப்பத்தில் இருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏர் கண்டிஷனர் எனப்படும் ஏசி எந்திரங்கள் உதவுகின்றன. ஆனால் மழை மற்றும் பனிக்காலங்களில் ஏ.சி. எந்திரங்களின் உபயோகம் குறைவாகவே இருக்கும். அத்தகைய சமயங்களில் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்...


குளிர்காலத்தில் ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தும்போது அவை எளிதில் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. ஏ.சி. எந்திரங்களில் உள்ள 'கண்டென்சிங் யூனிட் குளிர்காலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படாததே இதற்கு காரணமாகும்.


மேலும், ஏ.சி எந்திரத்தில் உள்ள கம்ப்ரசர் இயங்குவதற்கு அதில் ஒரு வகையான ரசாயன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இது குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் ஏ.சியை பயன்படுத்தும் போது, உறைந்த நிலையில் இருக்கும் இந்த ரசாயன எண்ணெயால் எந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


இதையும் மீறி நாம் ஏ.சி.யை பயன்படுத்தினால், அதில் இருக்கும் குளிரூட்டும் காயில்கள், ஏ.சி. யூனிட்டை ஒட்டுமொத்தமாக உறையச் செய்துவிடும். இதனால், ஏ.சி எந்திரம் எளிதாக பழுதடையும், அதேசமயம், குளிர்காலம் நீடிக்கும் 3 மாதங்கள் வரையில் ஏ.சி.யை முழுவதுமாக பயன்படுத்தாமல் வைத்திருப்பதும் தவறாகும்.


வெயில் காலத்தில் வெப்பத்தை தவிர்க்க குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெப்பம் தேவைப்படும். தற்போது வரும் ஏ.சி எந்திரங்களை ஹிட்டர்களாக மாற்றி பயன்படுத்தும் வசதியும் உள்ளது.


அதன்படி குளிர்காலத்தில் ஏ.சி. எந்திரத்தை இயக்கும்போது சூடான காற்றை வெளியிடும். இதுபோல இரண்டு காலநிலையிலும் இயங்கும் வகையிலான ஏ.சி.யை தேர்வு செய்வது சிறந்தது.


இவ்வகை வசதி இல்லாத ஏ.சி. எந்திரங்களை குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும் எனில் உங்கள் சுற்றுச்சூழலின் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.


ஏ.சி.யின் கம்ப்ரசர் வீட்டின் வெளியில் இருக்கும் போது அவுட்டோர் யூனிட்டில் இருக்கும் மழை மற்றும் குளிர்காலத்தில் இதில் தொடர்ந்து ஈரம் படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் எனவே, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைப்பது என பத்திரப்படுத்த வேண்டும்.


குளிர்காலம் முடிந்ததும் ஏ.சி.யை உடனடியாக பயன்படுத்த தொடங்கக்கூடாது. முறையாக அதை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்துவது நல்லது. ஏ.சி.யின் ஃபில்டர்களை தூசி இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். அதில் நிரப்பப்பட்டிருக்கும் வாயுவின் அளவையும் சரிபார்த்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.


ஏ.சி. பயன்படுத்தாத நாட்களில், அதன் மெயின் சுவிட்சை எக்காரணம் கொண்டும் ஆன் செய்து வைக்கக்கூடாது. அதை முழுவதுமாக அணைத்து வைப்பது. பிளக் பாயின்ட்டில் இருந்து அதன் இணைப்பை துண்டிப்பது நல்லது. இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

No comments:

Post a Comment