தொடர் கனமழை எதிரொலி: இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 8, 2024

தொடர் கனமழை எதிரொலி: இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 தொடர் கனமழை எதிரொலி: இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.


வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.


இதற்கிடையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.


தொடர்மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!


தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.08) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு


தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


சென்னையில் விடுமுறை இல்லை!


சென்னையில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட நிர்வாகம்


தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!


கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அறிவித்து உத்தரவு


தொடர் மழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


தொடர் கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!


நாகை, கீழ்வேளூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷீரவன் குமார் உத்தரவு


கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


No comments:

Post a Comment