இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 3, 2023

இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும்?


ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகம் பளபளப்பாக இருப்பதற்காக ட்ரை செய்கின்றனர். இதற்காக பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கின்றனர். சிலநபர்கள் வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்து முகத்தை அழகுபடுத்தினாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முடியும். எனவே இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க...

கற்றாழை-எலுமிச்சை


கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டுமுறை பயன்படுத்த வேண்டும்.


கற்றாழை-தேன்


கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவிவிடவும்.


கற்றாழை-சர்க்கரை


சர்க்கரை எக்ஸ்போலியேட்டாக பயன்படுகிறது. ஒரு பவுலில் கற்றாலை ஜெல் ஒரு ஸ்பூன், சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலக்கி இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.


மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வாருங்கள் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்.

No comments:

Post a Comment