அருமையான சுவையில் காளான் பிரியாணி செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 16, 2023

அருமையான சுவையில் காளான் பிரியாணி செய்வது எப்படி?

 அருமையான சுவையில் காளான் பிரியாணி செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


காளான் – 1/2 கிலோ


பாசுமதி அரிசி அல்லது பிரியாணி அரிசி – 2 கப்


வெங்காயம் – 1 (நறுக்கியது)


தக்காளி – 2 (நறுக்கியது)


இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்


கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)


புதினா – 1/4 கப் (நறுக்கியது)


பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)


எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்


நெய் – 3 டேபிள் ஸ்பூன்


தேங்காய் பால் – 1/2 கப்


தயிர் – 2 டேபிள் ஸ்பூன்


மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்


மல்லி தூள் – 2 டீஸ்பூன்


சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்


மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்


பிரியாணி இலை – 1


ஏலக்காய் – 3


இலவங்கம் – 2


கிராம்பு – 5


தண்ணீர் – 3 கப்


 உப்பு – தேவையான அளவு


செய்முறை


1/2 கிலோ காளானை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பிரியாணி செய்வதற்கு தயராக வைத்து கொள்ளுங்கள்.


அதன் பிறகு அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.


பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றவும் நெய் நன்கு சூடேறியதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகிய பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்பு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.


பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும்.


அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.


தக்காளி நன்கு வதக்கியதும், சுத்தம் செய்துள்ள காளானை சேர்த்து பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.


அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.


இவ்வாறு செய்தால் அருமையான சுவையில் காளான் பிரியாணி நமது வீட்டில் நாமே மிக எளிதாக செய்து விடலாம்.

No comments:

Post a Comment