சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 16, 2023

சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
மழைக்காலங்களில் காய்ச்சல் என்பது பொதுவானது. குறிப்பாக குழந்தைகளுக்கு தும்மல், சளி, இருமலோடு காய்ச்சலும் வரக்கூடும். மருந்துகள், கவனிப்புகள் என்று காய்ச்சலை சரி செய்தாலும் அதை தொடர்ந்து சளி, மூக்கடைப்பு வரக்கூடும். நீண்ட நாட்களாக பாடாய் படுத்தும். 

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க செய்யும். அதிலும் சளி கொஞ்சம் தீவிரமாக இருந்தால் அது நெஞ்சில் கெட்டியாக அடைத்துகொள்ளும். இதற்கு மருந்துகள் உதவியின்றி கை வைத்தியம் மூலமே சரி செய்துவிட முடியும். அப்படியான மூலிகை உணவு தான் தூதுவளை. 

எப்படி எடுத்துகொள்வது என்று பார்க்கலாம். முன்னோர்கள் காலத்தில் பருவகால உணவில் மழைக்கால உணவுகள் தனித்துவம் கொண்டவை. மழைக்காலங்களில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவில் இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு, சுக்கு போன்றவற்றை அதிகமாகவே சேர்ப்பதுண்டு. மிளகு ரசம், கொள்ளு ரசம் போன்றவை சளித்தொற்று பிரச்சனையிலிருந்து காப்பாற்றக்கூடியவை. 

குடிக்கும் நீரில் சீரகம், ஒமம்,துளசி, கற்பூரவல்லி என்று சேர்த்து தினம் ஒரு நீராக குடிப்பதன் மூலம் நோய்களிலிருந்து தற்காத்துகொண்டார்கள். கையோடு மூலிகைகளையும் உணவாக பயன்படுத்தினார்கள். அப்படியான மூலிகைகள் சளியை உடலிலிருந்து முழுமையாக வெளியேற்றியது. அவற்றில் ஒன்று தூதுவளை. ​

நெஞ்சில் சளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அவ்வபோது சளி பிடிப்பது உண்டு. இந்த சளி உடலில் சேர்ந்து நெஞ்சில் கட்டிக்கொள்ளும். பெரும்பாலும் குழந்தைகளும் வயதானவர்களுக்கும் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தான் அடிக்கடி சளி பிடித்து அவதிக்குள்ளாவார்கள். 

 மருந்து மாத்திரைகள் எல்லாமே சளி பிரச்சனையை வெளியேற்றினாலும் அவை தற்காலிகமானதுதான். பக்கவிளைவுகள் இல்லாமல் வீட்டு வைத்தியம் மூலம் உணவு முறையில் நெஞ்சில் கெட்டியாக இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற முடியும். அதற்கு உதவும் சிறந்த கஷாயம் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம். ​

நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்

 தேவையான பொருட்கள்

 மிளகு -5 டீஸ்பூன் 

 சுக்குப்பொடி - 10 டீஸ்பூன்

 தனியா -20 டீஸ்பூன் 

 ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

 இவை எல்லாவற்றையும் பொடித்து வைத்து கொள்ளுங்கள். (அளவு தேவைக்கேற்ப எடுத்து பொடித்து வைத்து கொள்ளலாம்) 

 இந்த பொடியுடன் கஷாயம் தயாரிக்கும் போது இந்த மூலிகைகள் சேருங்கள்.

 தூதுவளை -கால் கைப்பிடி 

 துளசி - கால் கைப்பிடி

 கற்பூரவல்லி - 2 இலை

 ஆடாதோடை இலை - கால் கைப்பிடி

 மூன்று டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளை போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை அணைக்கவும்.

 அரைத்த பொடி ஒரு டீஸ்பூன் அளவு போட்டு விடவும். எசன்ஸ் முழுமையாக இறங்கியதும் இலைகளை மட்டும் வெளியேற்றி ( அப்படியேவும் குடிக்கலாம்) பனைவெல்லம் அல்லது தேன் சேர்த்து கொடுக்கவும். 

 எப்படி கொடுப்பது? 

 5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு - கால் டம்ளர் அளவு கொடுக்கலாம்.

 9 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை டம்ளர் அளவு கொடுக்கலாம். 

பெரியவர்கள் முக்கால் டம்ளர் அளவு எடுக்கலாம். தினமும் இரண்டு வேளை கொடுத்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி கரைந்து மலத்தில் வெளியேறும்.

 பெரியவர்கள் தினமும் மூன்று வேளை வரை எடுக்கலாம். தொடர்ந்து ஒரு வாரம் வரை கொடுக்கலாம். சளி உள்ளுக்குள் தொடர்ந்து இருந்தால் ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு வாரம் கொடுக்கலாம்.

 குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக கொடுக்கும் போது பொடி அளவையும் இலைகள் அளவையும் குறைத்து கொடுக்கலாம். 

இனிப்புக்கு அதிகமாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் மறுக்காமல் குடிப்பார்கள்.

 நன்மைகள் 

 மிளகு, சுக்கு, தனியா மூன்றுமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுப்பவை.

 ஆடாதோடை இலை மற்றும் அதன் வேர் இரண்டுமே சளிக்கு அருமருந்து.

 தூதுவளை எப்ப்போதும் சளிக்கு எதிரான மூலிகை.

 மழைக்காலங்களில் தூதுவளைத்துவையல் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்த சாதம் உடனடி நிவாரணம் கொடுக்கும்.

 துளசி நீர் தொண்டைக்கு இதமளிக்க செய்யும்.

 கற்பூரவல்லி காரத்தன்மை கொண்டிருக்கும் இது சளி மற்றும் இருமலை போக்க உதவும்.

 இதுதொண்டைபுண் குறைக்க செய்கிறது

. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த கஷாயம் சளியை வெளியேற்றுவதோடு, இருமலையும் தடுக்க கூடும்.

No comments:

Post a Comment