சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் உட்பட எக்கச்சக்க நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 10, 2023

சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் உட்பட எக்கச்சக்க நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை

சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் உட்பட எக்கச்சக்க நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை
நித்தியகல்யாணி செடி பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. 

 குறிப்பாக புற்றுநோய்க்கு இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. 

 நித்திய கல்யாணி மருத்துவக் குணங்கள்

 நித்தியகல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்தம்செய்து அதனுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு சேர்த்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பருகுவதால் பல்வலி, உடல்வலி ஆகியவை குணமாகும். 

 நித்தியகல்யாணி பூக்கள் 10, இலைகள் 5, மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி அதனுடன் சுவைக்குத் தேவையான தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிலக்கு குணமாகும். 

 நித்தியகல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து காய்ச்சிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும். 

 நித்திய கல்யாணிப் பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ, கண் நோய்கள் குணமாகும்.

 இதைக் கொண்டு ஆறாத புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.

 நித்தியகல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன்சேர்த்துப் பருகிவர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.

 நீரிழிவு நோயாளிகள் 

 இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

 நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். 

 மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம் போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment