சுவையான கல்யாணவீட்டு உருளைகிழங்கு பட்டாணி பொரியல் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 18, 2023

சுவையான கல்யாணவீட்டு உருளைகிழங்கு பட்டாணி பொரியல் செய்வது எப்படி?

சுவையான கல்யாணவீட்டு உருளைகிழங்கு பட்டாணி பொரியல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: 

உருளை கிழங்கு -1/4 கிலோ

 பட்டாணி-100 கிராம் 

வெங்காயம்-1பெரிய அளவு

 தக்காளி-2 

குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்

 இஞ்சி-சிறிய துண்டு

 பூண்டு -5 பல்

 கறிவேப்பிலை-1 கொத்து
 கறி மசால் தூள்- சிறிதளவு

 உப்பு-தேவையான அளவு 

 தாளிக்க

கடுகு-1/2 ஸ்பூன்

 சீரகம்-1/4ஸ்பூன்

 உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்

 கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி

 செய்முறை:

 வாணெலியில் குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு அரைஸ்பூன், சீரகம் அரைஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, தாளித்து கொள்ளவும். 

பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிகொள்ளவும். 

வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி சிறிதளவு, பூண்டு ஐந்தாறு பற்கள் இரண்டையும் தட்டி போட்டுக் கொள்ளவும்.

 இஞ்சி பூண்டு பற்களை சேர்க்காமலும் செய்யலாம். 

பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை போட்டுக்கொள்ளவும்.

 வெங்காயம், தக்காளியை தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். 

தக்காளி விரைவாக வதங்கிட சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கொள்ளவும். 

மூடியிட்டு சிறிது நேரம் வதங்கிட விடவும்.

 தக்காளி வதங்கிய பின்னர், குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன், கறிமசால் தூள் அரைடீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.

 தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். 

சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பச்சை பட்டாணி வேக வைத்த தண்ணீரை ஊட்டச்சத்துக்கள் வீணாகாத வண்ணம் சேர்த்து கொள்ளலாம்.

 பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும். 

பச்சை பட்டாணி மற்றும் உருளைகிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். 

உருளை கிழங்கின் மேல்தோலூரித்து மசித்து கொள்ளவும்.

 தக்காளி வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விடலாம்.

 இப்பொழுது வேக வைத்து, மசித்த உருளைகிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும்.

 ரொம்பவும் அழுத்தி, நிறையதரம் கிளற வேண்டாம். 

ஓரளவு கிளறி, மசாலாக்கள் உருளைகிழங்கின் அனைத்துபக்கங்களிலும் சேரும் வண்ணம் கிளறி விடுங்கள். 

உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். சுவையான கல்யாண வீட்டு பட்டாணி உருளைகிழங்கு பொரியல் தயார்.

 பூரி, சப்பாத்திக்கும் உருளைகிழங்கு பட்டாணி மசாலா நீங்கள் துணைஉணவாக வைக்கலாம். 

தயிர் சாதம், சாம்பார் சாததிற்கு பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment