விநாயகர் சதுர்த்தி 2023: பூஜை செய்ய நேரம் மற்றும் வழிபடும் முறை - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 16, 2023

விநாயகர் சதுர்த்தி 2023: பூஜை செய்ய நேரம் மற்றும் வழிபடும் முறை

விநாயகர் சதுர்த்தி 2023: பூஜை செய்ய நேரம் மற்றும் வழிபடும் முறை
இந்து புராணங்களின் படி, பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின்போது விநாயகர் பிறந்தார். 

 இது பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் வரும். 

 இந்த ஆண்டு, விநாயக சதுர்த்தி செப்டம்பர் 18, 2023 திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. 

 விநாயக சதுர்த்தி 2023: 

 விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான தேதி, நேரம்

 விநாயகர் சதுர்த்தி பூஜை என்பது மாலையில் செய்வதே சிறப்பானதாகும். மாலையில் விநாயகரை வழிபட்ட பிறகு சந்திர தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.

 அப்படி பார்த்தால் செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி வந்து விடுகிறது. 

 ஆனால் செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்கினாலும், மறுநாள் வரை உள்ளது. இதனால் செப்டம்பர் 18 ம் தேதி நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு, விரதம் இருந்து வழிபட வேண்டும். 

 விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட வேண்டும்? 

 வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. 

 அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது. 

 இந்த முறை பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

 விநாயக சதுர்த்தி 2023 பூஜை விதிகள்

  1.பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நல்ல சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். 

 2. விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வருவதற்கு முன் வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று விநாயகர் சிலையை வாங்கி வர வேண்டும்.

 சிலையை சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி, வைக்கவும்.

 3. புன்னிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை தெளித்து, தீபம் ஏற்றி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, லட்டு 5 வகையான உலர் பழங்கள், 5 வகையான பழங்கள் வைத்து அலங்கரிக்கவும்

 4.சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை வெவ்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கவும். 

 5. இந்த நாட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, எனவே விநாயகப் பெருமானை வீட்டில் கொண்டு வர முடியாதவர்கள், கோவில்களுக்குச் சென்று, கணபதிக்கு லட்டு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யலாம்.

 6. விநாயகர் சிலையை வீட்டின் வட கிழக்கு திசையிலேயே வைக்க வேண்டும். 

 விநாயகர் சிலை, மேற்கு நோக்கி இருக்கும் வகையிலேயே வைக்க வேண்டும். 

 7. விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்த பிறகு எந்த ஒரு காரணத்திற்காகவும் அதை அங்கிருந்து அகற்றக் கூடாது.

 கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் போது மட்டுமே விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

 8.விநாயகர் சிலை வீட்டில் வைத்திருக்கும் போது எந்த காரணத்திற்காகவும் அசைவம், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. 

 கணேஷ உற்சவத்தின் 10 நாட்களும் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment