தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 13, 2023

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு
தனியார் பள்ளிகள், மாணவர்களின் குறிப்பேடு, சுயவிவர படிவத்தில், ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிட கூடாதென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 கோவை மாவட்டத்தில், ஒன்பது தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவர படிவத்தில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுமாறு அறிவுறுத்தியிருப்பதாக புகார் எழுந்தது. இதை ஆய்வு செய்து உறுதி செய்ததன் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

 இதில், ஒன்பது பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு, மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஜாதி, மத அடையாளங்களை இக்கல்வியாண்டு முதல் குறிப்பிட கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, அனைத்து வகை பள்ளிகளும், இதை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment