கிராமத்து ஸ்டைலில் சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 21, 2023

கிராமத்து ஸ்டைலில் சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?

கிராமத்து ஸ்டைலில் சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் 

 1. சின்ன வெங்காயம் - 100 கிராம்

 2. தக்காளி - 2

 3. கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

 4. நாட்டுக்கோழி - அரை கிலோ

 5. கல் உப்பு - தேவையான அளவு

 6. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 

 7. நல்லெண்ணெய் - தேவையான அளவு

 8. பட்டை மற்றும் கிராம்பு

 அம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள்

 1. தேங்காய் - 4 துண்டுகள்

 2. சீரகம் - 1 டீஸ்பூன் 

 3. சோம்பு - 1 டீஸ்பூன்

 4. மிளகு - 1 டீஸ்பூன்

 5. காய்ந்த மிளகாய் - 10

 6. வர கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

 7. இஞ்சி மற்றும் பூண்டு 

 இவற்றில் இஞ்சி, பூண்டை மட்டும் தனியாகவும், மற்ற பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தும் அம்மியில் அரைத்துக்கொள்ளவும்.

 செய்முறை

 * ’’அரைக்கக் கொடுத்திருக்குற பொருளையெல்லாம் அம்மியில நல்லா அரைச்சு வழிச்சு எடுத்து வையுங்க. 

 * நாட்டுக்கோழிய எடுத்து நல்லா கழுவிக்கோங்க. 

 * விறகு வெச்சு அடுப்பை பத்தவையுங்க. தீ அதிகமாவும் இருக்க வேணாம், குறைவாவும் இருக்க வேண்டாம். சரியா எரியவிடுங்க.

 * அடுப்புல, மண்சட்டி இருந்தா வையுங்க. இல்லாதவங்க பாத்திரத்தை வெச்சு, செக்குல ஆட்டுன நல்லெண்ணைய ஊத்துங்க. 

 * எண்ணெய் காய்ஞ்சதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிங்க. அப்புறம், சின்னச் சின்னதா வெட்டின சின்ன வெங்காயத்தை கொட்டி, நல்லா வதக்குங்க.

 * நல்லா வதங்கினதுக்கு அப்புறம், அம்மியில அரைச்சு வழிச்சு எடுத்து வெச்சிருக்கிற இஞ்சி, பூண்டை அதோட சேர்த்து, பச்சவாசம் போக நல்லா வதக்குங்க. 

 * நறுக்கி வெச்சிருக்கிற தக்காளிய சேர்த்து வதக்குங்க. இப்போ, கழுவிவெச்சிருக்கிற நாட்டுக்கோழிய அதுல சேர்த்துக் கிளறிவிடுங்க. 

 * நல்லா கிளறுனதுக்கு அப்புறம், அம்மில அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை அதுல கொட்டி, கிளறுங்க. 

 * ருசிக்குத் தக்கன உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நல்லா கிளறிவிட்டு, மூடியப் போட்டு வேகவிடுங்க. 

 * பதமா எரியுற தீயில, மசாலாவோட சேர்ந்து நாட்டுக்கோழிக் கறி அரை மணி நேரம் நல்லா வேகட்டும். 

 * இடையில, 10 நிமிசத்துக்கு ஒருமுறை கிளறிவிடுங்க. அரை மணி நேரத்துல மூடியை திறந்து பார்த்தா, தளதளனு கொழம்பு மிதக்கும், பூப்பூவா கறி வெந்திருக்கும், கமகமனு மணக்கும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

No comments:

Post a Comment