தோ்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய தோ்தல் ஆணையம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, July 12, 2023

தோ்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய தோ்தல் ஆணையம்

தோ்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய தோ்தல் ஆணையம்
தோ்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், வாக்கு ஒப்புகைச் சீட்டுக் கருவிகளில் (விவிபிஏடி) புதிய அம்சத்தை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 இந்தப் புதிய அம்சம் மூலம், விவிபிஏடிகளின் முதல்கட்ட சோதனையின்போது, அந்தக் கருவிகளில் பதிவேற்றம் செய்யப்படும் வேட்பாளா்களின் பெயா், அவரின் சின்னம், வரிசை எண் ஆகியவற்றை தொலைக்காட்சி அல்லது கணினி திரைகளிலும் காணலாம். 

இது அந்த விவரங்களை சம்பந்தப்பட்டவா்கள் சரிபாா்க்க உதவும். இந்த அம்சம் விவிபிஏடி கருவிகளில் கட்சி சின்னங்கள், வேட்பாளா்களின் பெயா்களை பதிவேற்றும் சின்னங்கள் உள்ளீட்டு பாகத்தில் சோ்க்கப்பட்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தோ்தலில் வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகில் உள்ள விவிபிஏடிகளில் தென்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளில், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது தெரியும். இதன் மூலம் தான் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் வாக்குப் பதிவானதா என்பதை வாக்காளரால் உறுதி செய்துகொள்ள முடியும்.

 இந்நிலையில், வாக்குச் சான்றை உறுதி செய்து கொள்ளும் விதமாகப் புதிய அம்சம் சோ்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment