இதயம் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் கறிவேப்பிலை: முடி வளர்ச்சிக்கு உதவும் இதன் பல்வேறு மருத்துவ பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, June 15, 2023

இதயம் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் கறிவேப்பிலை: முடி வளர்ச்சிக்கு உதவும் இதன் பல்வேறு மருத்துவ பயன்கள்

இதயம் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் கறிவேப்பிலை: முடி வளர்ச்சிக்கு உதவும் இதன் பல்வேறு மருத்துவ பயன்கள்
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம். 

 வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் இவை: 

 கொழுப்புகள் கரையும்

  காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். 

 ரத்த சோகை 

 ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். 

 சர்க்கரை நோய்

  சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். 

 இதய நோய்

  கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாப்பு தரும். 

 செரிமானம் 

 நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையில் அவதிபடுபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்னைகள் நீங்கிவிடும்.

 முடி வளர்ச்சி 

 கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். 

 சளித் தேக்கம் 

 சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேறி விடும். 


 கல்லீரல் பாதிப்பு

  கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். இத்தனை சிறப்புகள் பெற்ற கறிவேப்பிலை, மனித உடலின் தோழமைக்குரிய உணவு வகையாகும். எனவே கறிவேப்பிலையின் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்துவோம்.

No comments:

Post a Comment