ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 30, 2023

ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. 

15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி, களம்புகுந்த ருதுராஜ் கெய்க்வாட் - டெவான் கான்வே கம்போ வழக்கத்துக்கு மாறாக கியரை மாறி அதிரடியை தொடங்கினர். கெய்க்வாட் நிதானம் காண்பிக்க, கான்வே வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். 

6.3வது ஓவரில் அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தபோது ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட இந்த ஓவர் குஜராத் டைட்டன்ஸ்க்கு திருப்புமுனையாக அமைந்தது. நூர் அகமது வீசிய இதே ஓவரின் கடைசி பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த கான்வேவும் அவுட் ஆனார்.இதன்பின் ரஹானேவும், ஷிவம் தூபேவும் கூட்டணி சேர்ந்தனர். 

ஆக்சன் மோடில் வந்த ரஹானே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ரஹானேவும் தூபேவும் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு கேம் சேஞ்சிங் பவுலராக விளையாடி வரும் மோஹித் சர்மா இந்தமுறையும் அதேபோல் செயல்பட்டார். தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் 27 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை அவுட் ஆக்கியவர், இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் அம்பதி ராயுடு, தோனி என அவுட் ஆக்கி சென்னையின் கோப்பை கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார். 

 கடைசி ஓவரையும் மோஹித் சர்மாவே வீசினார். வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட முதல் பந்தே யார்க்கர் வீசியவர், அடுத்த மூன்று பந்துகளையும் சிறப்பாக வீசி களத்தில் இருந்த தூபேவையும் ஜடேஜாவையும் திணறடித்தார். 

இறுதியில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை வர ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரி அடிக்க சென்னை அணி ஐந்தாம் முறையாக கோப்பை வென்றது. 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து சென்னை அணி 171 ரன்கள் இலக்கை தொட்டது. ஜடேஜா 15 ரன்களும், ஷிவம் தூபே 32 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 கடைசி பந்து வரை த்ரில் ஆக சென்ற ஆட்டத்தால் கடைசி பந்தில் என்ன நடந்தது என்பதை தோனி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார். 

 குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்:

 டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமறிங்கிய விருத்திமான் சாஹா 2-வது ஓவரில் அழகாக ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால், தீபக் சாஹர் கையிலிருந்து நழுவிய அந்த பந்து சிஎஸ்கே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு உள்ளானது. 

அடுத்து 4-வது ஓவரில் சாஹர் வீசிய பந்தில் நேரடியாக சாஹருக்கே சுப்மன் கில் ஒரு கேட்சை கொடுத்தார். அதிலும் கோட்டைவிட்டார் சாஹர். ஆனால், இம்முறை சிஎஸ்கே ரசிகர்களின் கோபம் பந்தின் மீதல்ல... சாஹரின் மீது. இந்த கேட்சுகளைத் தொடர்ந்து விருத்திமான் சாஹா - சுப்மன் கில் இணை கலந்துகட்டி அடித்தனர். 32 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்து பாட்னர்ஷிப்பில் பட்டையை கிளப்பினர். 

கிடைக்கும் கேப்புகளில் அடித்துக்கொண்டிருந்த இந்த இணைக்கு 6வது ஓவர் ஆபத்தாக அமைந்தது. 6வது ஓவரில் 2 ரன்அவுட்டுகள் மிஸ்ஸானாலும், ரவீந்திர ஜடேஜா வீசிய கடைசி பந்து சுப்மன் கில்லைத் தாண்டி தோனியின் கைக்கச் சென்றது. அடுத்த நிமிடத்தில் ஸ்டம்பின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நடுவருக்கு வாய்ப்பை கொடுக்காமல் ஸ்டம்பிக் செய்த வேகத்தில் நம்பிக்கையுடன் நடந்துவந்த தோனியின் அந்த நடை சுப்மன் கில்லக்கு பயத்தை கொடுத்திருக்கலாம். உண்மைதான். 

20 பந்துகளில் 39 ரன்களுடன் வெளியேறினார் கில். சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். சாய் சுதர்ஷன் களத்திற்கு வந்தார். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த குஜராத் 86 ரன்களைச் சேர்த்திருந்தது. குஜராத்தின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஹாவின் விக்கெட்டும் தீபக் சாஹர் பந்தில் அரங்கேறியது. 39 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்த விருதிமான் சாஹா தீபக் சாஹர் வீசிய பந்தை தூக்கி அடிக்க அது நேராக தோனியின் கைக்குள் அடைக்கலம் புகுந்தது. வெளியேறினார் சாஹா. சாஹா + கில் = சாய் சுதர்ஷன் என சொல்லும் அளவிற்கு அமைந்து அவரின் ஆட்டம். 

வெறித்தனமாக ஆடிய அவர், சிஎஸ்கே பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவதிலேயே குறியாக இருந்தார். இதனிடையே தேவையான நேரங்களில் சிக்சர்களையும் அடித்த குஜராத் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக 16-வது ஓவரில், 3 ஃபோர், 1 சிக்ஸ் என விளாசி துஷார் தேஷ்பாண்டே ஓவரை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கூடவே ஹர்திக் பாண்டியா அடித்தால் சிக்ஸ் தான் என இரண்டு சிக்சர்களை விளாசினார். பத்திரனா வீசிய 19-வது ஓவரை சிக்சருடன் தொடங்கி வைத்தார் சாய் சுதர்ஷன். இரண்டாவது பந்தும் சிக்ஸ். 3-வது பந்தில் அவுட். 47 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசிய சாய் சுதர்ஷ்னின் இந்த ஆட்டம் அவரது கரியரில் முக்கியமான ஆட்டமாக அமைந்தது. 

அடுத்து வந்த ரஷித் கான் கடைசி பந்தில் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 214 ரன்களை குவித்தது. இதன்மூலம் சென்னைக்கு 215 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment