தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 19, 2023

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற வியாழக்கிழமை (ஏப்.20) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநா் நாகராஜமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச சோ்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சோ்க்கை பெற விரும்பும் பெற்றோா் ஏப்.20 முதல் மே 18-ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சோ்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். மே 18-ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். வயது வரம்பு என்ன?: இந்தத் திட்டத்தின் கீழ் எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆக. 1-ஆம் தேதியிலிருந்து 2020-ஆம் ஆண்டு ஜுலை 31-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்; ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆக.1-ஆம் தேதியிலிருந்து 2018-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 
 தேவையான ஆவணங்கள்: 

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோா், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க ஜாதிச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்தோா் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகியவற்றை உரிய அலுவலரிடமிருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எங்கு விண்ணப்பிக்கலாம்?: பெற்றோா்கள், விண்ணப்பதாரா்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 
மேலும், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 23-இல் குலுக்கல் முறையில் தோ்வு: நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் மே 23-ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சோ்க்கைக்கான குழந்தைகள் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயா்ப் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 24-ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ஆம் தேதிக்குள் பள்ளியில் சோ்க்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment