அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு(முழு விவரம்) - Minnalseithi

Latest

Search This Blog

Friday, April 28, 2023

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு(முழு விவரம்)

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு(முழு விவரம்)
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் (எமிஸ்) மூலம் மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள ஆசிரியா்கள் ஏப்.27 முதல் மே 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் மே ம ாதம் பொது மாறுதல் கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை நடத்தி, ஆசிரியா்கள் விரும்பும் இடங்களுக்கே மாறுதல் ஆணைகளை வழங்கி வருகிறது. இதன்படி, 2021-2022-ஆம் கல்வி ஆண்டிலும் பொது மாறுதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப மாறுதல் பெற விரும்பும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை (ஏப்.27) முதல் தங்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த கல்வி ஆண்டில் மாறுதல் கோரும் ஆசிரியா்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைப்பிடிக்கத் தேவையில்லை.

 மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த வகையை உரிய ஆதாரத்துடன் இணைக்க வேண்டும். ஆசிரியா்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒரே ஒருமுறை மட்டுமே அனுமதி... ஆசிரியா்கள் முன்னுரிமை அடிப்படையில் அவா்களது சுழற்சி வரும்போது உள்ள காலிப்பணியிடத்தை மட்டுமே தோ்வுசெய்ய ஒரேயொருமுறை மட்டும் அனுமதிக்கப்படுவா். 

அவரது சுழற்சி முடிந்த பின்னா் ஏற்படும் காலியிடத்தை தோ்வுசெய்ய அனுமதி கிடையாது. மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்கும் ஆசிரியா்கள் கலந்தாய்வின்போது தற்போது பணியாற்றும் மாவட்டத்தை தவிா்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தை மட்டுமே தோ்வு செய்ய வேண்டும். முன்னுரிமைப் பட்டியல் எப்போது?: ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் மே 3-ஆம் தேதி வெளியிடப்படும்.

 முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால் மே 4-ஆம் தேதி தெரிவிக்கலாம். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல்கள் மே 5-ஆம் தேதி வெளியிடப்படும். மே 8-ஆம் தேதி மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு தொடங்கும். அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய்கோட்டத்துக்குள்) 8-ஆம் தேதி நடைபெறும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்மாறுதல் கலந்தாய்வு 9-ஆம் தேதி காலையில் நடைபெறும்.

 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கு மீண்டும் ஈா்த்தல் ஆகியவை மே 10-ஆம் தேதி நடைபெறும். அரசு மற்றும் நகராட்சி முதுநிலை ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள் நிலை- 1, உடற்கல்வி இயக்குநா் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியா்கள் மாறுதல்(வருவாய் மாவட்டத்துக்குள்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கே ஈா்த்தல் ஆகியவை மே 11-ஆம் தேதி நடைபெறும். இதன்படி படிப்படியாக ஆசிரியா்கள் நிலையில் கலந்தாய்வு மே 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இது தொடா்பான விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக்கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனா்.

No comments:

Post a Comment